29/10/2023
45 years of
தமிழில் ஒரே ஒரு படத்திற்காக கொண்டாடப்பட்ட இயக்குனராக ருத்ரய்யா-வாகத்தான் இருப்பார் என நினைக்கிறேன்.
பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கனும் என வரையறை போட்டு வகுத்து வந்த சினிமா காலத்தில் அதனை மாற்றியமைத்த படம்
எந்த கருத்தையும் எவ்வித சமரசமின்றி
பொட்டில் அடித்தாற்போல எடுத்து வைத்த திரைப்படம்.
பெண்களுக்கான வரையறையை தகர்த்து, பாலியலை வெளிப்படையாக ஒரு பெண் மூலமே பேசி, இன்றைக்கு வெற்று கூவல் விடும் பெண்ணியத்தை அன்றே பேசி தமிழ் சினிமாவின் பல பிம்பங்களை உடைத்தெறிந்தது.
ஒரு பெண் சுமக்கும் அத்தனை வலியையும், சமூகத்தின் மீதுள்ள
வெறுப்பையும், அதன் கோர முகத்தையும் ஸ்ரீப்ரியா அப்படியே நமக்குள் கடத்தியிருப்பார். அவருடைய வாழ்நாள் பாத்திரம் இதுவென்று கூட சொல்வேன்.
அதேபோல ரஜினி ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்த படம் இது. ஆனால் அவர் இதைப்பற்றி எங்கேயும் கூறியதேயில்லை.
அவரைப் போலவே கமலும் அப்படியே தான்.
இந்த படத்தில் மற்றொரு சிறப்பு காஸ்ட்யூம் யாருமின்றி மூவரும் என்ன அணிந்து வறுகிறார்களோ அதை வைத்து தான் எடுத்தார்களாம்.
இளையராஜாவின் மூன்று பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
Tamil Nadu State Film Awardsல் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படம் மற்றும் சிறப்பு விருதை ஸ்ரீப்ரியாவுக்கும்
வாங்கித் தந்தது இந்த படம்.
விமர்சனங்களால் இன்றுவரை பாராட்டப்பட்டாலும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது
ருத்ரய்யாவும் இதன்பிறகு ஒரு படம் இயக்க அதுவும் வரவேற்பு பெறாமல் போக அவரும் இயக்கத்தை நிறுத்தினார். ஆனால் அவள் அப்படித்தான் அவர் இப்படித்தான் என காலம் கடந்தும் நின்று பேசுகிறது.