Cinema Avant-Gardé

Cinema Avant-Gardé விமர்சனம் படைப்புகளை மேம்படுத்தும்.

பெண்ணின் நிர்வாண உடல் சாதாரணமயப்படுத்தி திரையில் காட்ச்சிப்படுத்தும் பொழுது, பெண்ணின் S*xual Desire சாதாரணமயப் படுத்தப்ப...
10/07/2023

பெண்ணின் நிர்வாண உடல் சாதாரணமயப்படுத்தி திரையில் காட்ச்சிப்படுத்தும் பொழுது, பெண்ணின் S*xual Desire சாதாரணமயப் படுத்தப்படும் பொழுது, பெண்ணின் வயது ஏற்றம் சாதாரணமயப்படுத்தப்படும் பொழுது ,
S*x comedy திரைப்படங்களை அணுகும் விதம் மாறுபடும்.

Our New video is out
Link in first comment

‘போர் தொழில்’ திரைப்படம் இதுவரை தமிழில் வெளியான சில சீரியல் கில்லர் திரைப்படங்களிலிருந்தும்  சற்று  மாறுபட்ட கோணத்தில் உ...
20/06/2023

‘போர் தொழில்’ திரைப்படம் இதுவரை தமிழில் வெளியான சில சீரியல் கில்லர் திரைப்படங்களிலிருந்தும் சற்று மாறுபட்ட கோணத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தோன்றிய போதிலும் சில சிக்கல்களையும் கொண்டுள்ளது.

முக்கியமாக, ஒரு சீரியல் கொலைகாரன் அவ்வாறு மாறியதற்கான காரணத்தை பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் விதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பிற தமிழ் படங்களிலிருந்து வேறுபடுத்தி காட்சிப் படுத்தப்பட்டுள்ளது .
பழைய மூடு பனி முதல் மிஷ்கினின் சைக்கோ திரைப்படம் வரை "சைக்கோக்கள் பாவம், அவர்களின் Childhood trauma வினால் அல்லது கடந்த கால வாழ்க்கையின் மோசமான நிலையில் இந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பாவம்." என்னும் போக்கிலேயே இதுவரை வந்த தமிழ் சினிமாக்கள் சைக்கோக்களை ரொமான்டிசைஸ் செய்துள்ள நிலையில் கொஞ்சம் தெளிவுடன் இந்தப்படத்தை இயக்குநர் அணுகியிருப்பதாக தோன்றியது.

அதைத்தாண்டி திரைப்படத்தில் பல உலக பிரசித்தி பெற்ற சைக்கோ திரைப்படக் கதைகளின் போக்கு காணக்கிடைத்ததுடன் வழக்கமான தமிழ் சினிமாவின் மட்டமான போக்குகளும் அங்கங்கே பின்பற்றப்பட்டப் பட்டுள்ளது. குறிப்பாக திரைப்படத்தில் பிரதான கதாப்பாத்திரத்திற்கு (அசோக் செல்வன்/கதாநாயகனுக்கு) நெருங்கிய ஒருவரக்கு ஆபத்து நிகழும்படி காட்சிப்படுத்தி பார்வையாளர்களை பதட்டதிற்குள்ளாக்கும் வேலை நிகழ்ந்துள்ளது. ஏன் கதாநாயகனுக்கு நெருக்கமாக இல்லாத முன்றாம் நபருக்கு அநீதி நிகழும் போது கதாநாயகனின் கோபமும் பதட்டமும் குறைவாக இருக்கும் இல்லையா? பார்வையாளர்களை எமோஷனலாக நெருங்க முடியாது பாருங்கள். இது ஒன்றும் தனிப்பட்ட பழிவாங்கும் கதை இல்லையே. போலீசுக்கும் விக்டிமுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்தால் தான் படம் பார்வையாளர்களுக்கு பிடிபடும் என்று நம்புவது பார்வையாளர்களை முட்டாளாக்குவதற்காக செய்வது.

பொதுவாக சைக்கோ படங்களில் பெண்ணுடல்களை victim ஆக காட்டுவதும், வேறு வேறு கோணங்களில் சித்திரவதை செய்வதில் நுணுக்கமாக கவனம் செலுத்துவதும் திரைப்பட சுவாரஸ்யம் கருதி மேற்கொள்ளும் யுக்தி.
இது exploiting செய்வதற்கென்று எடுக்கப்படுபவை. ஒன்று பெண்ணுடலை அழகுப் பதுமையாக மட்டும்/பாலியல் பண்டமாக காட்சிப்படுத்தல்.
அல்லது இலகுவாக துன்புறுத்தி கொலை செய்யப்படக்கூடிய உயிரினமாக காட்சிப்படுத்தல். பெண்ணுடல் துன்புறுத்தப்படுவதை எந்த வித மனத்தடைகளுமின்றி ஆர்வமாக பார்க்கும் கூட்டம் எப்போதுமே இருந்து கொண்டிருக்கின்றன. இதுவும் Male gaze தான். பழைய ஹொலிவூட் சினிமாக்களில் ஹிச் காக் முதற்கொண்டு பெண்ணுடல்களை வெறுமனே சுவாரஸ்யம் கருதி பயன்படுத்தியவர்கள் விமர்சிக்கபட்டிருக்கிறார்கள்.

போர்த்தொழில் திரைப்படத்தில் ஒரு பெண் வருகிறார். அவரை முடிந்த வரை இயக்குநர் கதைக்குள் நல்ல potential உள்ள கதாப்பாத்திரமாக உபயோகப்படுத்தியிருக்கலாம். அவ்வளவு பெண்ணுடல்கள் மட்டும் கொல்லப்படும் இடத்தில் இயக்குநர் ஒரு counter narrative ஐ உருவாக்கியிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. ஏனென்றால் True Detective series மாதிரியே ஒன்றை பட்டும் படாமல் எடுக்க வேண்டும் என்கிற நெருக்கடி. அதே நேரம் திரைப்படத்தில் அந்த பெண்ணுக்கான தேவை, அந்தப்பெண்ணை climax இல் நாயகன் காப்பாற்ற வேண்டும்.
ஹீரோவாக தெரிய வேண்டும்.

அடுத்து ஏன் சைக்கோ கொலைகாரன் என்றாலே கிரிஸ்டியானிட்டியும் பைபிளும் மெழுகுவர்த்தியும் பாவ மன்னிப்புகளும் தமிழ் திரைப்படங்களில் முன்னிலைப் படுத்தப் படுகின்றன? தமிழ் நாட்டில் ஜாதிக்குள் இல்லாத சைக்கோக்களா ?
மததீவிரப் போக்கிற்குள் இல்லாத சைக்கோக்களா?
தமிழ் கலாச்சாரத்தை தீவிரமாக பற்றி பெண் பாவாடை தாவணி போடுவது பற்றியே பாடமெடுத்துக்கொண்டிருப்பவர்களுக்குள் பாரக்க முடியாத சைக்கோக்களா ?
பிரச்சனை இயக்குநர் பார்த்த மேற்கத்திய சைக்கோ படங்கள் எல்லாவற்றிலும் வரும் சைக்கோவும் கிறிஸ்தவன். அதனால் இலகுவாக எந்த சிக்கலுக்கும் ஆளாகாமல் அப்படியே பார்த்தததை பார்த்தபடி அப்படியே எடுத்து விட்டிருக்கிறார்.

இப்படத்தில் இரண்டு விதமான சீரியல் கில்லர்களை காட்சிப் படுத்தியிருக்கிறார்.
சீரியல் கில்லர்கள் உருவாவதற்கான காரணங்களாக இருக்கும் பொது அம்சங்களை இவ்விரண்டு விதமான கொலைகாரர்களாக பகுதிவாரியாக பிரித்து காண்பித்திருக்கிறார் இயக்குனர். அது இயக்குனரின் புனைவு யுக்தி. இதனாலேயே பெண்விரோத போக்கை இத்திரைப்படம் கொண்டிருக்கிறதோ என்கிற அச்சமும் உருவாகிறது.

திரைப்படம் குறித்து பிரதீப் பாலு பேசிய காணொளி வெளியாகியுள்ளது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Video Link in first comment 🔗

இம்முறை திரைப்படப் பரிந்துரையில்சமகால ஜெர்மனிய இயக்குனர்களில் மிக முக்கியமானவரான christian petzold இன் Afire (2023) திரை...
13/06/2023

இம்முறை திரைப்படப் பரிந்துரையில்
சமகால ஜெர்மனிய இயக்குனர்களில் மிக முக்கியமானவரான christian petzold இன் Afire (2023) திரைப்படம் குறித்த அறிமுகம்.
இவரது படங்கள் முழுக்க முழுக்க திரையனுபவம் சார்ந்தது; என்றாலும் முடிந்த வரை Spoiler இல்லாமல் கதைக் கருவை பேச முயற்சித்துள்ளோம்.
சினிமா ஆர்வலர்கள் மற்றும் நண்பர்கள் காணொளியை பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

Do watch & subscribe ❤️🌻

Link 🔗 in 1st comment

Modern Love (Chennai )2023சென்னையில் மாடர்ன் லவ் என்று சொல்லி ,  Anthology ஒன்றை எடுத்து விட்டிருக்கிறார்கள். சென்னையில்...
01/06/2023

Modern Love (Chennai )2023
சென்னையில் மாடர்ன் லவ் என்று சொல்லி , Anthology ஒன்றை எடுத்து விட்டிருக்கிறார்கள். சென்னையில் வாழும் காதலர்கள் எதிர்கொள்ளும் சிக்கலில் ஏதாவது ஒன்றை பிரதிபலித்திருந்தால் கூட நிம்மதியாய் இருந்திருக்கும்.
கடந்த நான்கைந்து வருட காலத்தில் காதலுறவிலுள்ளவர்கள் அதிகமாக நாடியது சைக்காட்டிஸ்ட்களைத்தான்.
அந்தளவுக்கு ஒருவர் மற்றவரை பொறுத்துக்கொள்ள முடியாமல்,ஒருவரிடத்திற்குள் மற்றவர் தன்னை சகித்துக்கொள்ள முடியாமல் திணறிய யத்தார்த்தங்கள் தான் அதிகம். குறிப்பாக இணையத்தின் ஆக்கிரமிப்பு, காதல் உறவுகளை கேள்விக்குட்படுத்தியிருப்பது தவிர்க்கவியலா சிக்கலாக உருவெடுத்திருக்கும் நிலையில் இந்த Anthology காதலுறவில் இணைய ஆக்கிரமிப்பை முழு முற்றாகப் புறந்தள்ளி விட்டிருக்கிறது.

அடுத்து ஆண்மைய கதாபாத்திரங்களை வைத்து காதலைப் பேச எந்த இயக்குனரும் முன்வரவில்லை. தற்காலத்தில் பெண்ணியம் சார்ந்த கதைகள் சினிமாவில் அமோகமாக வியாபாரமாகிறது என்பதால் காதலில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கலை மட்டும் பேச முன்வந்திருக்கிறார்களோ என்னமோ?
மாடர்ன் லவ் என்கிறார்கள்..ஆனால் எந்த Gender,sexuality சார்ந்தும் explore செய்து பார்க்க எந்த முற்போக்கு இயக்குனர்களும் முன்வராதது பெரிய ஏமாற்றம். போதாக்குறைக்கு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா நினைவோ ஒரு பறவையில் homophobic ஆன டயாலாக் ஒன்றை உருட்டி வைத்திருக்கிறார். இன்னும் அதில் வரும் காதலர்களுக்குள் என்ன சிக்கல் என்று சொல்லாமல் பழைய மூன்றாம் பிறை மெமரி லாஸ் ஶ்ரீ தேவி மோட்க்கு தாவி கதையை முடித்திருக்கிறார்.
இவர்கள் தான் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்த வந்தவர்களாம். போங்கடா டேய் 🚶🚶
Tk movie hidden details ன்னு சொல்றப்பவே பதறுதே 😪

wong kar wai 4 spoon + tarkovsky 2 spoon+ matter scene 2 spoon+ memory Loss 1 spoon = TK cult cinema

Video Link in first comment 🖇️🚶

ஈரான் சமூகம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாகவே அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதில் இன்றய கா...
25/05/2023

ஈரான் சமூகம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாகவே அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதில் இன்றய காலகட்டத்தில் முதன்மையானது பெண்களை கையாளும் விதம். அதையும் கூட ஒரு கடுகளவிலான பிரச்சனை தான் என்று கருதத்தக்க அளவிலேயே பாலியல் தொழிலாளிகளை அந்நாடு நடாத்துகிறது. இந்தப் பாலின ஒடுக்குமுறைகளையும் தாண்டி ஈரானில் இருக்கும் மற்றொரு பெரிய சிக்கல் அச்சமூகத்தில் போதைப் பழக்கம் புறையோடிப் போயிருப்பது. வரைமுறையற்ற காமமும், போதைப் பொருள் பிரயோகமும் இஸ்லாத்தில் ஹராம் என்று கருதப்படும் பொழுது, குர்ஆனின் ஷரியா சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஈரானின் கொமேய்னி அரசில் பாலியல் தொழிலாளிகளுக்கும் போதைப் பொருட்களுக்குமான தேவை இத்தனை வீரியமாக இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்? அடிப்படையில் இது குர்ஆனை மையமாக வைத்து உருவாக்கப்படும் எந்தவொரு அரசிலிலும் தென்படக் கூடிய முரணாக உள்ளது. எந்த இஸ்லாமிய நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தப் பிரச்சனைகளை ஒளிவுமறைவின்றி உள்ளது உள்ளபடியாகவொரு பேச்சு பொருளாக மாற்ற உதவும் ஈரான் திரைக் கலைஞர்கள் சொற்பம் தான். அந்த சிறிய எண்ணிக்கையுள் Nahid Persson Sarvestani அதிமுக்கியமானவரு ஆவணப்பட இயக்குனராகத் திகழ்கிறார். ஈரானில் நிலவும் பாலியல் தொழில் குறித்து, இரண்டு பாலியல் தொழிலாளிகளை மையமாக வைத்து அவர் 2004ல் உருவாக்கிய ஆவணப்படம் ‘Prostitution: Behind the Veil’. இத்திரைப்படம் குறித்தும் அவரது இதர முக்கியமான ஆவணப்படங்கள் குறித்தும், ஈரானில் பாலியல் தொழில் மற்றும் அரசியல் நிலை குறித்தும் புல்புல் இஸபெல்லா இந்தக் காணொளியில் சற்று விரிவாகப் பேசியுள்ளார்.

எங்களது முந்தைய ‘Holy spider’ குறித்த காணொளியில் கூறியது போல பாலியல் தொழிலாளிகள் குறித்து ஈரானில் வெளிப்படையாக கருத்து முன்வைக்கும் இடம் ஈரான் அரசால் தொடர்ச்சியாக முடக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இத்தகைய எதிர் அரசியல் குரல்கள் இன்றியமையாத இடத்தை வகிக்கின்றன. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் காணொளியை பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
Do watch & subscribe ❤️
🖇️Link in first comment

அண்மையில் பார்த்து வியந்து போய் அதன் தாக்கத்திலிருந்து உடனே வெளிவர முடியாமலிருந்த திரைப்படம் 'Holy spider'.வறுமை,போதை வஸ...
10/05/2023

அண்மையில் பார்த்து வியந்து போய் அதன் தாக்கத்திலிருந்து உடனே வெளிவர முடியாமலிருந்த திரைப்படம் 'Holy spider'.
வறுமை,போதை வஸ்தின் வீரியம் மற்றும் பாலியல் தொழிலின் அதிகரிப்பு, பெண்ணடக்குமுறை என ஈரான் எதிர்கொள்ளும் பல்லாயிரம் நெருக்கடிகளில் பிரதானமானவை இவை. பெண்களுக்கு அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நாட்டில் வறுமையின் நிமித்தம் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை ஒரு சீரியல் கொலைகாரன் தேடித்தேடி கடவுளின் பெயரைச்சொல்லி கொலை செய்கிறான். அவனது செயலை ஆதரிக்குமளவு நாட்டு மக்களின் மதத் தீவிரப்போக்கு வேரூன்றியிருக்கிறது. எந்த ஒரு நாட்டின் ஆட்சிமுறை மதத்துடன் இணைந்து செயல்படுகிறதோ அது சர்வ நாசம் தான்.

2001ம் ஆண்டு ஈரான் சமூகத்திலிருந்த ஒரு சீரியல் கொலைகாரன் குறித்த உண்மைக்கதையை மையப்படுத்தி திரைப்படமாக்கப் பட்டுள்ளது. சென்ற வருடம் நிகழ்ந்த பல முன்னணி திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பல்வேறு திரைப்பட விமர்சகர்களாலும் உலக சினிமா விரும்பிகளாலும் பெரிதும் பாராட்டப்பட்ட திரைப்படம்.
இன்னும் கான் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றும், தங்கப்பனை விருதுக்கு பரிந்துரைக்கவும் பட்டது.

பல அளவுகோல்களில் ஈரான் சமூகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் இடையிலிருக்கும் ஒற்றுமைகள் காரணமாக இத்திரைப்படம் தமிழ் பார்வையாளர் சூழலுக்கு நிச்சயம் பொருந்தக் கூடியது என்பதனால் இப்படம் குறித்து பேச முன்வந்தோம்.
தமிழ்ச்சூழலில் மஜீத் மஜீதியை பார்த்துப் பழகிய ஈரான் சினிமா மோகத்திலிருப்பவர்களுக்கு இத்திரைப்படம்
தணிக்கைகளின்றி அப்பட்டமாக காட்சிப் படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கலாம்.
ஈரான் சினிமாப் போக்கில் இத்தகைய தணிக்கைகளில்லாத திரைப்படங்கள் ஏன் அவசியம்? , இயக்குநர் சைக்கோ கொலை காரனை இஸ்லாமிய சூழலுக்குள் காட்சிப்படுத்திய விதம், ஈரான் சூழலில் ஆண்கள் பெண்களை எப்படி அணுகுகிறார்கள்?, இப்படி பல விடயங்களை திரைப்படத்தை வைத்து மிக நுணுக்கமாக ஆய்வு செய்து ப்ரதீப் பேசியிருக்கிறார்.

Do watch & subscribe ❤️
Link in first comment

‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வெளியாகியுள்ள நிலையில் இயக்குநர் மணி ரத்னம் மூலக் கதையின் பல விடயங்களை மாற்றிவிட்டு ...
03/05/2023

‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வெளியாகியுள்ள நிலையில் இயக்குநர் மணி ரத்னம் மூலக் கதையின் பல விடயங்களை மாற்றிவிட்டு வேடிக்கை காட்டியிருக்கிறார்.
இது மூலக்கதையை வாசித்த அனைவரும் அறிந்த விடயம். புத்தகம் ஒரு வாசகர் மனதில் உருவாக்கும் பிம்பங்களை காட்டிலும் படத்தின் காட்சிகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த மாற்றங்களில் எந்தப் பிரச்சனையும் யாருக்கும் இருக்கப்போவதில்லை.
ஆனால், சினிமாவாக பொன்னியின் செல்வன் புத்தகம் செயல்படும் தளத்திற்கு அருகில் கூட செல்லவில்லை.

குறிப்பாக அருண்மொழி வர்மனைப் (பொன்னியின் செல்வனை) பற்றிய கதை, எப்படி ஆதித்த கரிகாலனையும் அவனது கைகூடா காதல் புலம்பல் பற்றிய கதையாக மாறியது? என்பதை யோசிக்கும் போதே, வாசகர்களையும் பார்வையாளர்களையும் முட்டாளாக்கியிருப்பது புரியும். இயக்குனருக்கு குறிப்பாக இந்த
'நந்தினி- ஆதித்த கரிகாலன்' இருவரின் கைகூடா காதலின் நாடகத்தில் மட்டும் ஆர்வமிருக்கையில் இருவரின் கதாப்பத்திரங்களையும் தனியே கதையாகப் படமாக்க முயற்சித்திருக்கலாம்,ராவணனைப் போல. அதை விட்டு தமிழனின் வீரத்தையும் போரையும் புகழ்கிறோம் என்று சொல்லி பிற்போக்கின் படு குழியில் விழுந்து கிடக்கிறார் இயக்குநர்.

அடுத்து திரையில் தோன்றும் முக்கிய கதாப்பாத்திரப் பெண்கள் அனைவரையும்
S*x icon ஆகவே பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக "பூங்குழலி" திரைப்படத்திற்குள் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் பார்வையாளர்களை sexually tease செய்வதற்கென்றே உருவாக்கியதாக தோன்றியது. இன்னும் பூங்குழலி தமிழ் பார்வையாளர்களுக்கிடையில் கொண்டாடப்பட்டதும் அதற்காகத்தான். தமிழ் சினிமாக்குள் ஒரு ஐட்டம் பாடலில் பெண்ணுக்கு என்ன இடமிருக்குமோ அதுபோலத்தான் தோன்றியது பூங்குழலியின் இடம். ஏனென்றால் அந்தக் கதாபாத்திரம் திரையில் தோன்றும்போது உருவாக்க முயற்சி செய்த பில்டப் அதிகம்.

நந்தினி குரலில், பேச்சுத்திறனில் மயக்கும் வித்தை தெரிந்தவள் என்பதுதான் கதை. ஆனால் திரையில் அறியணைக்காக ஏதோ தகாத உறவுக்கு அழைத்து மயக்கி காரியம் சாதிக்கும் பெண்ணாகத்தான் தோன்றியது.
குந்தவையும் அரசியல் நுணுக்கங்கள் தெரிந்த, தன் நாட்டு அறியணைக்காக எந்த எல்லைக்கும் செல்லும் தந்திரமிக்க பெண். ஆனால் அவரும் கத்தியை வைத்து வந்தியத்தேவனை ஏதோ ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார். இது போக கதையில் வரும் ஒவ்வொரு பெண்களையும் குளித்து நீரில் மூழ்கி எழ வைத்து ஈரம் சொட்டச் சொட்ட ஒவ்வொரு காட்சியும் இருக்கும். திரைப்படத்தின் கதைக்குள் எந்தவிதப் பங்கும் வகிக்காத இத்தகைய காட்சிகள் ஏன் ?எதற்கு?.

திரைப்படம் குறித்து பிரதீப் பாலு சில முக்கியமான விடங்களை அடையாளப்படுத்தி விமர்சித்துள்ளார்.

Do watch & subscribe

விடுதலை திரைப்படம் பாகம் ஒன்றை வைத்து திரைப்படத்தின் போக்கை முழுமையாக மதிப்பிட முடியவில்லையென்றாலும் பார்த்தவரை துருத்தி...
03/04/2023

விடுதலை திரைப்படம் பாகம் ஒன்றை வைத்து திரைப்படத்தின் போக்கை முழுமையாக மதிப்பிட முடியவில்லையென்றாலும் பார்த்தவரை துருத்திக்கொண்டிருந்தவகளை அடையாளப்படுத்த முயற்சிக்கிறோம்.

ஜெயமோகனின் கதைக்கரு (துணைவன்) ஒடுக்குமுறைக்கு "எதிராக கிளர்ச்சியுற்று எழும் புரட்சியாளர்களும் ஆதிக்க வன்முறையாளர்கள் போலவே வன்முறைகளைப் பாரபட்சமின்றி கையிலெடுப்பவர்கள்தான்" என்கிற விமர்சனத்தை அதிகாரத்தின் படிநிலையில் கீழிருக்கும் ஒருவனைப் பயன்படுத்தி, அவனை எளியவனாக, அப்பாவியாக, சூழ்நிலைக் கைதியாக காண்பித்து அவனை வாசகர்களுடன் நெருக்கத்திற்குள்ளாக்கி வாசகர்களை குற்றவுணர்வுக்குள்ளாக்குவதும் மனிதாபிமானத்தை கேள்விக்குட்படுத்துவதும்
சற்று முரணகவே தோன்றுகிறது.

இது ஜெயமோகனின் "கைதிகள்" கதையிலும் நிகழ்ந்ததே.
ஆதிக்க அரச அதிகாரத்தினுள் இயங்குபவரை மையமாக வைத்து அவரைச் சூழ்நிலைக்கைதியாக்கி அவர் கண்வழியே ஜெயமோகன் உருவாக்கும் உலகை காட்சிப்படுத்துவது எழுத்தாளரின் குரல் ஏதோவொரு அதிகாரப் படிநிலையிலுள்ளவனாக தன்னைப் பாவித்துக் கொண்டு எழுதுவதாகத் தோன்றுகிறது. இது ஜெயமோகன் பொது வெளியில் பேசும் அரசியல் நிலைப்பாட்டுடன் பொருத்திப் பார்த்து அணுகும் போது தெளிவாகிறது.

வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தை பார்த்தால்,
ஒரு பக்கம் இயக்குனர் ரபீஃக் இயக்கிய "ரத்த சாட்சி" (ஜெயமோகனின் கைதிகள் கதை)திரைப்படத்தை தன் பாணியில் எடுக்க முனைந்திருப்பதாகத் தோன்றியது.
ரத்த சாட்சியில் வரும் இளங்கோ குமரவேலின் இடம் தான் விடுதலை திரைப்படத்தில் சூரியின் இடம்.
ரத்த சாட்சியில் இளங்கோ குமரவேல் தன் கண் முன் நிகழும் அத்தனை வன்முறைகளுக்கும் சாட்சியாக, சூழ்நிலைக்கைதியாக, அதிகாரத்திற்கு எதிராக ஒரு துரும்பைக்கூட நகர்த்த முடியாமல் உருக்குலைந்து கொண்டிருப்பார்.
அதாவது அநீதிக்குள்ளானவர்களில் தனக்கு வேண்டப்பட்டவர் என்று யாருமே இல்லாதவிடத்து சக மனிதனுக்கு நிகழும் அநீதியை கண்டு ஒருவன் குமுறும் இடம் ரத்த சாட்சியில் இயல்பாக உருப்பெற்றிருக்கும்.

அதே நேரம் விடுதலையில் சூரியின் காதலியாக மலைவாழ் சமூகத்தில் வாழும் பெண் இருப்பதானாலேயே அங்குள்ள அனைத்து சாமானியர்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற போக்கில் கதை சொல்லும் பாணி வழக்கமான தமிழ் சினிமா நாயக பிம்பத்தைக் கோருகிறது.
வெற்றிமாறனின் விடுதலை திரைப்படப் பாணி வழக்கமான தமிழ் சினிமா நாயகப் போக்கை மீட்டுருவாக்கம் செய்கிறதென்றால்,
ரபீஃக்கின் ரத்த சாட்சி மாற்று சினிமாப் பாதையை நோக்கி முன்னகர்கிறது.

கதாநாயகனுக்கு காதலி ஒருத்தி கிடைக்க வேண்டுமென்றால் நாயகி கண்ணுக்கு தெரியும் படி நல்லவனாக நடந்துகொள்ளல் அல்லது நாயகிக்கு நல்லது செய்து காதலியாக்குதல் புனைவில் தேய்ந்து போன மிகப்பழைய பாணி.
அதைத்தான் விடுதலை திரைப்படத்தில் வெற்றிமாறன் கையிலெடுத்திருக்கிறார்.
அங்குள்ள மலை வாழ் மக்களுக்குளிருந்து
சூரிக்கு இப்படி ஒரு காதல் உறவு கிடைக்கவில்லையென்றால் அவரது மனிதாபிமானம் எவ்வளவு தூரம் சீண்டப்படும் ? அவ்வாறு சீண்டப்படுவதற்கு எதிரான ஆவேசம் காதலிக்கு அநீதி நிகழ்வதால் என்றில்லாமல் எந்தப்பெண்ணுக்கு நிகழ்ந்தாலும் அவருக்குள்ளிருந்து வெடிக்குமா?

முக்கியமாக பெண்களுக்கு நிகழும் வன்முறைக்காட்சிகளைப் பட்டைதீட்டிக் காட்ட அதீத கரிசனமெடுத்திருக்கிறார் இயக்குனர். (ப்ரதீப் பாலு விடுதலை விமர்சனக் காணொளியில் குறிப்பிட்டிருப்பது போல) ஒரே சூழலில் ஒரே இடத்தில் பெண்கள் மீதான அதீதமான தொடர் வன்முறைக் காட்சிகளை திரும்பத் திரும்ப காட்சிப்படுத்தி திரைப்படத்திற்குள் அத்தகைய வன்முறைகளை சாதாரணமயப் படுத்தியிருக்கிறார்.

இது எத்தகைய இடத்திற்குள் செல்கின்றதென்றால்
1.அரச அதிகாரிகளின் வன்முறையின் வீரியத்தை காட்சிப்படுத்த,
2.விஜய் சேதுபதியின் பதில் வன்முறைகளை நியாயப்படுத்த,
3.சூரியின் ஆவேசம் நிறைந்த தீவிரத்தன்மையை நியாயப்படுத்தவென
பெண்ணின் நிர்வாணம், பெண்ணுடல் மீது நிகழும் அத்தனை வன்முறைகளையும் திரும்பத் திரும்ப நுணுக்கமாக காட்சிப்படுத்தி ஒருவிதமாக பார்வையாளர்களை Exploit செய்திருப்பதாக தோன்றியது.
இங்கு பெண்ணுடல் நிர்வாணம் S*xualized செய்யப்படவில்லை ஆனால் Sensationalized செய்யப்பட்டிருக்கிறது.

பெண்கள் மையக்கதாப்பத்திரமாக இல்லாத திரைப்படத்தில் அவர்களை வன்முறைகளுக்குப் பலியாக்கி ஆண் கதாநாயகர்களைதூக்கி காட்டுவது
மிகப்பழய ஆண்மைய சினிமாப் பாணி. (கேட்டால் ஜெயமோகனின் கதை பழையது என்று கூடச் சொல்வார்கள்) பின்னர் ஆண்களும் அம்மணமாக நடித்திருக்கிறார்களே என்றால், ஆண்கள் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தப்படுவதும் பெண்கள் நிர்வாணப்படுத்தி துன்படுத்தப்படுவதும் அவ்வளவு துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறதா ?
என்று கேட்டால் இல்லை.
கதையில் நிகழும் ஒவ்வொரு வன்முறையும், கதைத் திருப்பங்களுமே பெண்ணுடல் மீதான வன்முறையின் பின்னர்தான் நிகழ்ந்தேறுகிறது. அதிகாரத்திலுள்ளவர்கள்
எந்த ஆணையும் அம்மணமாக்கி அடித்துத் துன்புறுத்திய பின்னுமில்லாத அதிர்வு பெண்ணை அம்மணமாக்கிய பின் திரைப்படத்திற்குள் நிகழ்கிறதென்றால் இயக்குனர் புரிந்தே பெண்ணுடல் மீதான (தேவைக்கு அதிகமான)தொடர் வன்முறைகளை புகுத்தி பார்வையாளரை உணர்வுப்பூர்வமாக exploit செய்து தன் விருப்பத்திற்கு கையாள பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
இது திரைப்படத்திலிருந்த மிகப்பெரும் விமர்சனம்.

வழக்கம் போல டப்பிங் மிகப்பாரிய சொதப்பல். சூரி, சேத்தன், பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார்கள். முக்கியமாக சேத்தனின் நடிப்பு அட்டகாசம். பகுதி இரண்டு வரும்வரை பொறுத்திருந்து மீதியைத் தொடர்வோம்.

விடுதலை பாகம் 1 (2023) திரைப்படம் குறித்து பிரதீப் பாலுவின் விமர்சனக் காணொளி எங்கள் சேனலில்..
Link in first comment.

‘ரத்தசாட்சி’ திரைப்படம் வெளியாகி முதல் சில நாட்களுக்குள்ளேயே நாங்கள் அதை பார்த்துவிட்டோம். எங்களுக்கு திரைப்படம் பிடித்த...
16/01/2023

‘ரத்தசாட்சி’ திரைப்படம் வெளியாகி முதல் சில நாட்களுக்குள்ளேயே நாங்கள் அதை பார்த்துவிட்டோம். எங்களுக்கு திரைப்படம் பிடித்திருந்தது. முக்கியமாக திரைப்படமாக ஒரு சிறுகதை மாறிய விதம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இத்திரைப்படம் வெளியானவுடன், அதன் மூலமாக இருந்த சிறுகதையின் மீதான விமர்சனங்களினாலேயே தமிழ் அறிவுஜீவிகளால் இத்திரைப்படம் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. இது பற்றி கூற ஒன்றுமில்லை, சினிமா கதைகளை நடப்பியல் நிஜங்களாக பாவிக்கும் போக்கிலிருந்து தமிழ் அறிவுஜீவிகளும் கூட இன்னும் விடுபடவில்லை. இத்திரைப்படத்தில் இயக்குனர் ரஃபீக் கையாண்டிருந்த பிரதான அம்சமாக எனக்குத் தோன்றியது, இரண்டு எதிர் துருவங்களிலிருக்கும் அரசியல் இயக்கங்களுக்குள் நிகழக் கூடிய மனிதத்துவ கொலை (உருவக ரீதியாக). அந்த மனிதத்துவக் குலைவு இரண்டு முனைகளிலும் ஒரே விதத்தில் நிகழ வேண்டிய அவசியமில்லை. அவை வெவ்வேறு விதங்களில் இருந்தாலும், குலைவு, அந்தந்த இயக்கங்களின் செயல்பாட்டுப் படிநிலைகளுக்குள், ஏதோவொரு விதத்தில் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது என்பதை திரைப்படம் சற்று வெளிப்படையாகவே முன்வைத்துவிட்டதாக எங்களுக்குத் தோன்றியது. பல விமர்சனங்களை திரைப்படம் எதிர்கொண்டிருந்தாலும், எங்களின் இந்த மதிப்பீட்டில் இதுவரை எந்த மாற்றமும் எற்படவில்லை.

காரணம் அவர் அதற்கு முன்பு உருவாக்கியிருந்த ‘Life in Stars’ திரைப்படத்தை நாங்கள் அச்சமயம் பார்த்திருந்தோம். அதில் காட்டியிருந்த வாழ்கையின் சிறு துகள் அவர் எந்தவகையிலும் வலிந்து இடதுசாரிக் கருத்தியலுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தை கொண்டிருக்கக் கூடியவர் அல்ல என்று எங்களுக்குப் புரிந்திருந்தது. இரண்டு படங்களுக்கும் இடையிலிருக்கும் ஒற்றுமை மனிதத்துவம் தொங்கி ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு மெல்லிய இழையை காட்சி ரீதியில் வெளிப்படுத்தியிருப்பது தான். பலரும் இந்தக் குறும்படத்தை முதலில் பார்த்துவிட்டு பிறகு ‘ரத்தசாட்சி’யை கண்டிருந்தால் அவர்களுக்கு திரைப்படம் முற்றிலும் வேறொரு பரிமானத்தில் தெரிந்திருக்கும்; முக்கியமாக ஒரு சராசரி மனிதனின் பதற்றத்தை நுணுக்கமாக text to visualஆக மாற்றுவதில் ரஃபீக்குக்கு பிடிபட்டிருக்கும் நுட்பம் நன்கு புரிந்திருக்கும்.

‘Life in Stars’ குறும்படத்தை எங்கள் Cinema Avant-Gardé சேனலில் வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். We are happy and honoured.படம் குறித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.

காணொளி இணைப்பு முதல் கமென்ட்டில்

முதல் முறையாக எங்களின் Cinema Avant-Gardé சேனலில் ஒரு குறும்படம் வெளியாகப் போகிறது. படத்தின் பெயர் ‘Life in Stars’. இதை ...
15/01/2023

முதல் முறையாக எங்களின் Cinema Avant-Gardé சேனலில் ஒரு குறும்படம் வெளியாகப் போகிறது. படத்தின் பெயர் ‘Life in Stars’. இதை இயக்கியவர் சமீபத்தில் ஆஹா ஓடிடியில் வெளியாகியிருந்த ‘ரத்தசாட்சி’ திரைப்படத்தின் இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில். சென்னையில் சர்வீஸ் செக்டாரில் பணிபுரியும் ஒரு வடகிழக்கு இந்திய பெண்ணின் ஒரு நாள் வாழ்கை இதன் கதை. இதை பார்த்த பொழுது ஒரு குறும்படத்தை இத்தனை செய்நேர்த்தியுடன் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தான் முதலில் எங்கள் கவனத்தை ஈர்த்தது. படம் சென்று முடியும் இடமும் நம் சமகால வாழ்கையின் blindspotல் வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதாகத் தோன்றியது. எங்களுக்கு மிகவும் பிடித்தவொரு குறும்படம் இது.

இயக்குனர் ரஃபீக் இதை வெளியிடும் உரிமையை எங்களிடம் வழங்கியது பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. We are so happy and honoured. நாளை மாலை 6 மணிக்கு இது Cinema Avant-Gardé சேனலில் வெளியாகும்.

Trust me you won’t be disappointed ❤️❤️

போரும் அதில் ஒரு பெண் எழுத்தாளர் எதிர்கொள்ளும் நெருக்கடி மற்றும் அலைக்களிப்புகளைப் பேசும் மிக முக்கியமான திரைப்படம்.இம்ம...
13/01/2023

போரும் அதில் ஒரு பெண் எழுத்தாளர் எதிர்கொள்ளும் நெருக்கடி மற்றும் அலைக்களிப்புகளைப் பேசும் மிக முக்கியமான திரைப்படம்.
இம்முறைத் திரைப்படப் பரிந்துரையில் சீனத்திரைப்படமான The Golden Era (2014) திரைப்படத்தை பிரதீப் பாலு அறிமுகம் செய்து அவரது பார்வையைப் பதிவு செய்திருக்கிறார். வாய்ப்பிருப்பவர்கள் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் ❤️

Do watch & subscribe 🫂
Video Link in first comment

16/11/2022

அந்நியமான ஒரு சூழலில் பெண்கள் தனியே செல்ல ஏன் பயப்பட வேண்டும் ? யாரைப்பார்த்து பயம் கொள்கிறார்கள் ? சமூகத்தில் நம்முடன் புழங்கும் சக ஆண்களைப் பார்த்துதானே ? பெண்களுக்கு பாதுகாப்பாளர்களாக ஆண்கள் ஏன் எப்போதும் இருக்க வேண்டும் ?

ஐடியா எங்கிருந்து உருவாகிறது?

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Cinema Avant-Gardé posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category